மியன்மார் நாட்டில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி பர்மாவின் மேற்கு வட மேற்கு பகுதியில் 144 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.