சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அபூர்வமான மருத்துவக் குணங்கள் நிறைந்த வன உயிரின பொருட்கள் சட்ட விரோதமாக கடத்த முயற்சி நடப்பதாக இரணியல் காவல்துறை அதிகாரிக்கு தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து சுங்கான் கடையில் தனிப்படை அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் எவ்வித அரசு அனுமதி இன்றி திமிங்கலத்தின் உமிழ்நீர் சுமார் 5 கிலோ அளவில் சட்ட விரோதமாக கடத்தி சென்ற காரை பொலிஸார் மடக்கி பிடித்தனர்.

இதனை அடுத்து காரில் இருந்த செங்கல்பட்டை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

பின்னர் 5 பேரும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.