அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலை பள்ளியில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் 3 பேர் மாணவர்களும், வயது முதிர்ந்த ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலில் ஈடுபட்டவர் 18 வயதுடைய நபர் என கண்டறியப்பட்டுள்ளது.

திமோதி ஜார்ஜ் சிம்ப்கின்ஸ் என்ற அந்த நபர் தாக்குதல் நடத்தி விட்டு வாகனத்தில் தப்பி சென்றுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் அவரை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.