துருக்கியில் செயற்கை சுவாசக்கருவி வெடித்ததில் பரவிய தீ காரணமாக  ஒன்பது கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.துருக்கியின் தென்பகுதியில் உள்ள சங்கோ பல்கலைகழக மருத்துவமனையில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மருத்துவமனையின் தீவிரசிகிச்சை பிரிவில் தீ ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


56 முதல் 85 வயதிற்குட்பட்ட 9 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவமனை அதிகாரிகள் காயமடைந்த நோயாளியொருவர் மற்றுமொரு மருத்துவமனைக்கு மாற்றப்படும் வேளை உயிரிழந்துள்ளார்.

கொரோனா நோயாளிகளிற்கு கிசிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் தீ விபத்துக்கள் ஏற்படுவது கடந்த சில மாதங்களில் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஒக்டோபர் மாதம் ருமேனியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் பத்து நோயாளிகள் உயிரிழந்தனர்.