பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி, 25 பேர் பலியாயினர்.

200க்கும் அதிகமானோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின், ஹார்னாய் பகுதியை மையமாக கொண்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகளில் 6 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கின. கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.