வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு வடக்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்.

இளைஞரான இவர் சைக்கிளிலேயே லடாக்கிற்கு செல்லதிட்டமிட்டு அதன்படி சைக்கிளிலேயே பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி சைக்கிளில் தனது வீட்டில் இருந்து பயணத்தை தொடங்கிய இவர் 34 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து கடந்த 2ஆம் திகதி மாலை 5 மணி அளவில் லடாக்கை சென்றடைந்துள்ளார்.

பயணம் செய்த நாட்களில் தினசரி சுமார் 150 கிலோமீட்டருக்கு மேல் சைக்கிள் ஓட்டி ஆங்காங்கே தங்கி லடாக்கிற்கு சென்று சேர்ந்துள்ளார்.

வேலூரில் இருந்து லடாக் வரை 17 மாநிலங்களை கடந்து, சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்ட இவருடைய பயணங்களின் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் இவர் லடாக் சென்ற வீடியோ மற்றும் போட்டோக்கள் வைரலாக பரவுகிறது. சதீஷ்குமாருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சாதனை படைத்த அவருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து சதீஷ்குமார் கூறுகையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த இடத்திற்கு சென்று வந்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றார்.