வார இறுதி நாட்களில் நிறுத்தப்பட்டிருந்த அலுவலக ரயில் சேவைகள், இன்று(23) காலை முதல் மீள சேவையில் ஈடுபடவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாதென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன், சுகாதார வழிமுறைகளுக்கமைய ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக,  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.