மஹாராஷ்டிரா மாநிலம்,மும்பையில்,பால்கர் மாவட்டம் வசாய் மேற்கு மார்டெஸ் கடற்கரையில் நேற்றுமுன்தினம் ராட்சத திமிங்கலம் ஒன்று செத்து கரை ஒதுங்கியுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சியினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வை மேற்கொண்ட நிலையில் இது 30 டன் எடையும் 40 அடி நீளமுள்ள திமிங்கலம் என தெரிவித்துள்ளனர்.

கடலில் உயிரிழந்து பல நாட்கள் ஆனதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த திமிங்கலத்தின் உடல் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.