#தமிழ்நாடு

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் அருகே உள்ள பூதக்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், 20 சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று பகல் அங்கன்வாடியில் சமைத்து பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த அங்கன்வாடி ஊழியர்கள், உணவை ஆய்வு செய்தபோது, அதில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அங்கன்வாடி மைய ஊழியர்கள் உணவை உட்கொண்ட 17 சிறுவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியாளர் அங்கன்வாடி ஊழியர் ஜெயசித்ரா மற்றும் உணவு சமைத்த அம்சவல்லி ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.