இன்று நியூசிலாந்தில் சமூகத்தில் 20 புதிய கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் சமூக வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 821 ஆக உயர்ந்துள்ளது.

அதில் 127 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப்போது உறுதி செய்யப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஆக்லாந்தில் 804 பேரும் வெலிங்டனில் 17 பேரும் அடங்குவர்.

இதில் மொத்தம் 788 தொற்றுகள் டெல்டா வேரியன்டுடன் இணைக்கப்பட்டுள்ளது,மேலும் 33 வழக்குகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிர்வகிக்கப்பட்ட தனிமையில் மூன்று பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில் ஆக்லாந்துக்கு வெளியே உள்ள அனைத்து பகுதிகளும் நாளை இரவு 11.59 மணிக்கு கொவிட் -19 எச்சரிக்கை நிலை 2 இற்கு செல்வதாக அரசு அறிவித்துள்ளது.

தற்போதைய சமூக வழக்குகள் இதுவரை ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ள நிலையில் ஆக்லாந்துக்கு வெளியே உள்ள பகுதிகள் மட்டும் எச்சரிக்கை நிலை 2 இற்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.