இன்றையதினம் சமூகத்தில் 20 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார இயக்குநர் டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவை அனைத்தும் ஆக்லாந்தில் இனங்காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமூகத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 801 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வைரஸால் பாதிக்கப்பட்ட 79 பேர் பூரன குணமடைந்துள்ளனர் இந்நிலையில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 722 ஆக உள்ளது.

ஆக்லாந்து மருத்துவமனைகளில் இப்போது 38 சமூக தொற்றாளர்கள் சிகிச்சையில் உள்ளனர் இதில் ஆறு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், குறித்த 38 தொற்றாளர்களில் ஒன்பது தொற்றாளர்கள் North Shore மருத்துவமனையிலும், 16 பேர் மிடில்மோர் மருத்துவமனையிலும், 13 பேர் ஆக்லாந்து நகர மருத்துவமனையிலும் உள்ளதாக டாக்டர் ப்ளூம்ஃபீல்ட் கூறினார்.