இன்று அதிகாலை Tokoroa இல் உள்ள ஒரு வணிக நிலையத்தில் நடந்த கொள்ளை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இன்று Rotorua இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நள்ளிரவு 12.30 மணியளவில் ஆறு குற்றவாளிகள் திருடப்பட்ட பொருட்களை மூன்று திருடப்பட்ட கார்களில் ஏற்றி சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Taupō, Rotorua மற்றும் Tokoroa பகுதியில் அனைத்து கார்களையும் கண்டுபிடித்திருந்தாலும் அவற்றில் ஒரு காரை மட்டுமே பொலிஸாரால் மடக்கி பிடிக்க முடிந்துள்ளது.

இந்நிலையில் திருடப்பட்ட பொருட்களில்  பெரும்பாலானவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.