நேற்றையதினம் ஆக்லாந்தில் தாக்குதல் நடத்தியமைக்காக பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு இலங்கை நியூசிலாந்து அரசிடம் கோரியுள்ளது.

இலங்கை தூதுவரின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் என்றும், இது பயங்கரவாத தாக்குதலாகும் என பிரதமர் ஜசிந்தா ஆர்டன் தெரிவித்திருந்தார்.

எனினும் இவர் தொடர்பில் தகவல் வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே அவர் தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.