கிறிஸ்ட்சர்சில் இன்று அதிகாலையில் நடந்த கொள்ளை செயல்களுக்குப் பிறகு இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை 6 மணிக்கு முன்னதாக இரண்டு கார்கள் திருடப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

முதலாவது கார் ஹூன் ஹே பகுதியிலிருந்து எடுக்கப்பட்டு பின்னர் அது அங்கேயே கைவிடப்பட்டுள்ளது.பின்னர் இரண்டாவது கார் திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நகரத்தின் தெற்கே உள்ள ரோலஸ்டனில் ஒரு கொள்ளை சம்பவத்திற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

காலை 7 மணிக்கு முன்பு, கார் ரோலஸ்டன் டிரைவில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அதை நிறுத்த முடியவில்லை.

அது இறுதியில் கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவில் நின்றது.பின்னர் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்மேலும் திருடப்பட்ட கார் தீப்பிடித்து எரிந்திருந்ததாக போலீசார் உறுதிபடுத்தினர்.