இன்று சமூகத்தில் 82 புதிய கொவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த தொற்றுகள் அனைத்தும் ஆக்லாந்தில் பதிவாகியிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போதைய  மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையை 429 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 415 பேர் ஆக்லாந்திலும் 14 பேர் வெலிங்டனிலும் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது 25 சமூக தொற்றாளர்கள் மருத்துவமனையில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் இருபத்தி மூன்று பேர் நிலையான நிலையில் வார்டில் உள்ளனர், அதே நேரத்தில் இரண்டு பேர் ICU இல் பராமரிக்கப்படுகிறார்கள் என அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.