சித்ராவின் தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், திடீர் திருப்பமாக, சித்ராவுடன் டேட்டிங் சென்றபோது எடுத்துக்கொண்ட வீடியோவை காட்டி, இளம் நடிகரும் பிரபல தொகுப்பாளருமான ரக்ஷன் மிரட்டி வந்ததாக சித்ராவின் தோழி தெரிவித்துள்ளார்.

 

தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காமராஜ் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சித்ராவின் மரணம் தற்கொலை என்பது உறுதியானது.

 

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சித்ரா பெற்றோரை தொடர்ந்து, நேற்று ஹேம்நாத்தின் தந்தை, தாய் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதில் யாரை காப்பாற்றுவதற்காக இந்த அவசர கைது என தன்னுடைய மனதில் உள்ள சந்தேகத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஹேம்நாத்தின் தந்தை.

 

இந்நிலையில் சித்ராவின் செல்போனை கைப்பற்றியபோது, அதில் பல்வேறு மெசேஜ் அழிக்க பட்டிருந்தது போலீசாருக்கு, சந்தேகத்தை உறுதி செய்தது.

 

பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரும் படி சித்ராவை சில அரசியல் பிரமுகர்கள் வற்புறுத்தியதாக கூறப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து மற்றொரு பகீர் தகவல் வெளியாகியுள்ளது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில், இரண்டாவது நாயகனாகவும் நடித்திருந்த ரக்ஷன், சித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டி வந்ததாக சித்ராவின் தோழி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.