கொரோனா பிரச்சனையிலிருந்து மீண்ட திரையுலகம் தற்போது தான் சற்றே நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளது. கிட்டதட்ட 7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன, படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட முன்னணி பிரபலங்கள் பலரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ,இன்று காலை முதலே படுவேகமாக பரவி வரும் இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.