Northland எல்லையில் வாகன ஓட்டிகளை நிறுத்தி விசாரிக்க Northland போலீசார் மூன்று போக்குவரத்து சோதனை சாவடிகளை அமைத்துள்ளனர்.

நார்த்லேண்ட் மாவட்ட கமாண்டர் கண்காணிப்பாளர் டோனி ஹில் ஒரு அறிக்கையில், இன்று காலை பிராந்தியத்தின் தெற்கு நுழைவாயில்களில் போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளதாக தெரிவித்தார்.

வாகன ஓட்டிகள் அத்தியாவசியப் பயணத்தை மட்டுமே மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக காவல்துறை முன்பு இப்பகுதி முழுவதும் தற்காலிக சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்துப் பணிகளைப் பயன்படுத்தி வந்தது, என்றார்.

"எங்களுடைய சமூகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,மேலும் வாகன ஓட்டிகள் பயணக் கட்டுப்பாடுகளை புறக்கணித்தால் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்" என்று ஹில் கூறினார்.

"வெளியிலிருந்தோ அல்லது பிராந்தியத்தைச் சுற்றி உள்ள பகுதியிலிருந்தோ Northland இற்குள் செல்ல முயற்சிக்கும் எவரும் ஒரு சோதனைச் சாவடியில் அல்லது காவல்துறையினரால் நிறுத்தப்படுவார்கள் என்றும் மேலும் அவர்களின் பயணத்திற்கான நோக்கம் பற்றி விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.