இன்று வைரராபாவில் உள்ள  Castlepoint இல் ஏற்பட்ட நீர் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பிற்பகல் 1.45 மணியளவில் Castlepoint கடற்கரையில் ஒரு நபர் கடலில் மூழ்கியதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் ஒரு படகு மூலம் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அந்த நபரை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன," என்று போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் போலீசார் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.