Hawke's Bay இல் பேட்டரி திருட்டுகள் அதிகமாக காணப்படுகின்றமையால் குறித்த பகுதியில் உள்ள கனரக வாகன ஓட்டுனர்களுக்கு தங்கள் வாகனங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நேப்பியரில் கனரக வாகன பேட்டரிகள் திருடப்பட்டதாக 19 அறிக்கைகளும், ஹேஸ்டிங்ஸில் 13 அறிக்கைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நிலையில் மக்கள் தங்கள் பேட்டரிகளின் விவரங்களை பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும் என்று ஆக்டிங் டிடெக்டிவ் சார்ஜென்ட் ஸ்டீபன் லியோனார்ட் தெரிவித்துள்ளார்.

ஓட்டுனர்கள் தங்கள் பேட்டரிகளை பாதுகாக்க சிசிடிவி அல்லது வயர்லெஸ் எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ அறிவுறுத்தப்படுகிறார்கள், இது அலாரம் அல்லது லைட் சென்சார்கள் மூலம் திருடர்கள் வந்தால் எச்சரிக்க உங்கள் வீட்டில் அலாரத்தை செயல்படுத்தலாம் என லியோனார்ட் கூறினார்.