கிழக்கு ஆக்லாந்தின் Maraetai இல் ஏற்பட்ட கடுமையான விபத்தைத் தொடர்ந்து சாட்சிகளுக்காக பொலிசார் முறையிடுகின்றனர்.

குறித்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் பிற்பகல் 2.20 மணியளவில் Maraetai Drive இல் இடம்பெற்ற இந்த கார் விபத்துக்கு  அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

இந்த விபத்தில் ஒருவர் ஆக்லாந்து நகர மருத்துவமனைக்கும் மற்றொருவர் ஆம்புலன்ஸ் மூலம் மிடில்மோர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

Maraetai Drive மற்றும் கீன்ஸ் வீதி இரண்டும் மூடப்பட்டு, அந்தப் பகுதியைச் சுற்றி வளைவுகள் அமைக்கப்பட்டன.

இந்த விபத்து குறித்த தகவல் உள்ள எவரும் 09 262 9109 என்ற எண்ணில் மனுகாவ் பொலிஸ் தீவிர விபத்து பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.