கண்டி - திகன பகுதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கண்டி - திகன உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் காலங்களில் மேலும் பல நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக புவிச்சரிதவியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் அத்துல சேனராத்ன இதனை தெரிவித்துள்ளார்.

விக்டோரியா நீர்தேக்கம் அமைந்துள்ள பிரதேசத்தில் அதிகளவு சுண்ணாம்பு கற்கள் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

இதனால் நீர்தேக்கத்தின் மதில்களுக்கும் சேதம் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த அகழ்வுப் பணிகள் வரையரைக்கு உட்படாமல் தொடர்ந்தும் இடம்பெற்றால் மேலும் பல நில அதிர்வுகள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.