நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிற பகுதிகளில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதால், முழு டிரான்ஸ்-டாஸ்மன் குமிழ் இன்று இரவு முதல் குறைந்தது எட்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.

இன்று இரவு 11.59 மணி முதல் குமிழி மூடப்படும்.மேலும் இது எட்டு வாரங்களுக்குப் பிறகு மறு மதிப்பீடு செய்யப்படும்.

கிவிஸ் மற்றும் சாதாரண நியூசிலாந்து குடியிருப்பாளர்கள் ஒரு வாரத்திற்கு வீடு திரும்புவதற்கு green flightsஐ அணுக முடியும், இருப்பினும் NSW மற்றும் விக்டோரியாவுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் உள்ளன, மேலும் அனைவரும் புறப்படுவதற்கு முன்னரான கொவிட் பரிசோதனையை காட்ட வேண்டும்.

பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்று பிற்பகல் ஆக்லாந்தில் இருந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.