இன்று பிற்பகல் Paeroa மற்றும் Waihi இடையே இரண்டு கார்கள் மோதுன்டு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கரங்கஹாக் ஜார்ஜ் மூடப்பட்டு திசைதிருப்பல்கள் செய்யப்பட்டன.

பிற்பகல் 3.15 மணியளவில் மாநில நெடுஞ்சாலை 2 இல் குறித்த சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.