கிறிஸ்ட்சர்ச்சை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி 50 பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில் இன்று கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆடியோ காட்சி இணைப்பு மூலம் ஆஜரானார்.

50 வயதான இந்த நபர் கடந்த ஜூன் மாதத்தில் ஒரே நாளில் அவர் பலமுறை பாலியல் மீறல் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுமியின் மீது அநாகரீகமான செயல்களைச் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகும் வரை இடைக்கால பெயர் ஒடுக்கத்தை குறித்த நபர் கேட்டுக்கொண்ட நிலையில் நீதிபதி காட்கார் அவரின் அடையாளத்தையும் அவரது நிறுவனத்தின் அடையாளத்தையும் பாதுகாக்கும் இடைக்கால ஒடுக்க உத்தரவை வழங்கினார்.

மேலும் செப்டம்பர் 20 ஆம் திகதி குறித்த நபர் மீண்டும் நீதிமன்றில் ஆஜராக இருக்கும் நிலையில் நீதிபதி அவரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.