நேற்றிரவு ஆக்லாந்தில் மதுபான கடையொன்றில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து  மதுபான கடை ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிசார் தேடுகின்றனர்.

ஒரு ஆணும் பெண்ணும் இரவு 7 மணிக்குப் பிறகு குயின் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு மதுபான கடைக்குள் நுழைந்துள்ளனர்,கடை ஊழியர் ஒருவர் குற்றவாளிகளுடன் வாக்குவாதம் செய்ததை தொடர்ந்து அவர் பலத்த காயமடைந்தார்" என்று போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக கொள்ளையில் ஈடுபட்ட குறித்த பெண் மற்றும் ஆணின் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டனர்.

இந்த நபர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல் உள்ள எவரும் ஆக்லாந்து நகர காவல்துறையை 09 302 6557 என்ற எண்ணிலோ அல்லது க்ரைம் ஸ்டாப்பர்களை 0800 555 111 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.