கடந்த வாரம் வெலிங்டனில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஒருவரைத் தேடிய நிலையில் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

30 வயதான சாண்டி கல்கின் என்ற குறித்த நபர் கடைசியாக ஜூலை 10ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் கோர்ட்டேனே பிளேஸில் காணப்பட்டார்.

குறித்த நபர் கடந்த வாரம் காணமல் போயுள்ள நிலையில் குயின்ஸ் வார்ஃப் அருகே உள்ள ஒரு நீர் நிலையில் இன்று காலை 10 மணியளவில் பொலிஸ் தேசிய டைவ் குழுவினரால் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முறையான அடையாளம் காணல் இன்னும் நடைபெறவில்லை என்றாலும், உடல் சாண்டி கல்கின் தான் என்று நம்பப்படுகிறது.

கல்கினைக் கண்டுபிடிப்பதில் காவல்துறையினர் மேற்கொண்ட பணிக்கும் ஆதரவிற்கும் கால்கின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் தேடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பொதுமக்களின் உதவி மற்றும் அக்கறைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்று போலீசார் தெரிவித்தனர்.