இந்த ஆண்டு தொடக்கத்தில் தரனாக்கியில் ஒரு நபர் தனது தந்தையையும் அவரது சகோதரரையும் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

நாதன் ஃப்ரோஸ்ட் என்ற குறித்த நபர் இன்று காலை நியூ பிளைமவுத் உயர்நீதிமன்றத்தில், வாங்கானுய் சிறைச்சாலையின் வீடியோ இணைப்பு வழியாக ஆஜரானார்.

இந்த நபர் தனது 15 வயதான ரீகன் ஃப்ரோஸ்ட் லான் என்ற சகோதரரையும், 55 வயதான ஸ்டீபன் ஃப்ரோஸ்ட் என்ற தனது தந்தையையும் கடந்த ஜனவரி மாதம் ஹவேராவில் ஒரு குடியிருப்பு முகவரியில் கொலை செய்தார்.

இதனிடையே அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி தண்டனை வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.