வங்காளதேசத்தில் பழச்சாறு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் இயங்கிவரும் குறித்த பழச்சாறு தொழிற்சாலையின் 6வது மாடியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் 52 பேர் பலியானதுடன் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் 50 பேர் காயமடைந்ததுடன் அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.