சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி வருவதாகவும், எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் மேத்யூஸ் (34) இலங்கை கிரிக்கட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார்.

அணித் தேர்வுக் குழு இளம் அணியை தேர்வு செய்ததன் பிற்பாடு, ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக தெரிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.