வடக்கு கேன்டர்பரியில் ஒரு நிலப்பரப்பில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் கைகுராவின் வடக்கே உள்ள Kēkerengū இல் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

நான்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு தரைப் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தீயணைப்பு மற்றும் அவசரநிலை தெரிவித்துள்ளது.

இந்த தீப்பரவலில் பாதுகாப்புத் துறையால் நிர்வகிக்கப்படும் ப்ளூ ஸ்லிப்ஸ் பாதுகாப்புப் பகுதியின் பெரும்பகுதி உட்பட 20 ஹெக்டேர் நிலப்பரப்பு தீ பற்றி எரிந்துள்ளமை குறிப்பித்தக்கது.