ஒரே இரவில் ஆக்லாந்து வீதியில் மூன்று கார்கள் தீக்கிரையாகி உள்ளன.

இன்று அதிகாலை 3 மணியளவில் அவொண்டேலில் உள்ள விக்டர் தெருவுக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

மூன்று வாகனங்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். அவை இப்போது போக்குவரத்திற்கு பயன்படுத்துவதில்லை என குடும்பத்தார் கூறுகிறார்கள்.இருப்பினும் அவர்கள் தங்கள் கார்களுக்குள் சேமித்து வைக்கப்பட்ட பொருட்களை இழந்துவிட்டார்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் மவுண்ட் ஸ்மார்ட் ஸ்டேடியம் அருகே நேற்று இரவு ஒரு கார் தீப்பிடித்து எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.