மோட்டுவேகாவில் (Motueka) இரவுவேளையில் தாமதமாக வீட்டிற்கு நடந்து சென்றபோது ஒரு பெண் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் அதிகாலை 2.30 மணிக்கு இடையே நடந்த இந்த தாக்குதல் குறித்து நெல்சன் பேஸ் துப்பறியும் நபர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

High Street மற்றும் Thorp Street அல்லது  Greenwood மற்றும் Tudor Street இடையே எங்காவது அந்த பெண் தாக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

துப்பறியும் நபர்கள் குறிப்பாக வில்கின்சன் தெரு,லெட்ஜர் அவென்யூ, குட்மேன் டிரைவ் மற்றும் லெட்ஜர் - குட்மேன் பூங்கா போன்ற பகுதிகளில் தற்போது அவதானிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாரேனும் குறித்த பகுதிகளில் ஒரு dark tights,சிவப்பு சாக்ஸ் மற்றும் செல்போன் ஆகியவற்றை கண்டிருந்தால் அல்லது அந்த நேரத்தில் ஏதேனும் சத்தங்களை கேட்டிருந்தாலோ அல்லது தாக்குதலை பார்த்திருந்தாலோ 105 ஐ அழைத்து 210704/5199 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.