உலக நாடுகளிடம் இருந்து தனித்தே இருக்கும் வடகொரியா தற்போது அதே உலக நாடுகளிடம் கையேந்தும் நிலைமைக்கு சென்று இருப்பதாக தகவல்கள் வருகிறது. நிலைமை சரியில்லை என்று வடகொரியாவின் இரும்பு கோட்டையில் இருந்து தகவல்கள் கசிய தொடங்கி உள்ளன. உலகில் அதிக அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக வடகொரியா கருதப்படுகிறது.