கனடா  மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பத்தின் தாக்கத்தால் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் பகுதியில் மட்டும் நேற்று 134 பேர் உயிரிழந்ததாகவும் இந்த மரணங்கள் பருவநிலை தொடர்பானவை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு மாநகராட்சிகளில் இருந்து இன்னும் உயிரிழப்பு குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதேவேளை, கனடாவில் வெப்ப நிலை அதிகமாகக் காணப்பட்ட நிலையில் வழக்கமாகத் தகித்திருக்கும் துபாய் கூட குளிர்ச்சியான பிரதேசம் என்று கூறுமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.