தமிழ்நாடு - மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட அ.தி.மு.கவில் சசிகலா ஆதரவு குரல்கள் வலுத்து வருகின்றன. மதுரை நகரில் நேற்று திருப்பரங்குன்றத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில் இன்று மதுரை நகரின் பல பகுதிகளிலும் அதேபோல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது அ.தி.மு.கவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் எத்தனை இடங்களில் சுவரொட்டி ஒட்டுவார்களோ என திகிலில் இருக்கிறதாம் எடப்பாடி கோஷ்டி.