ஸ்கொட்லாந்திலிருந்து இங்கிலாந்திற்கு கால்பந்தாட்டபோட்டிகளை பார்க்கசென்ற சுமார் 2000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

18திகதி இங்கிலாந்துடனான போட்டிகளை பார்வையிடுவதற்காக லண்டன் சென்ற பெருமளவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் வெம்பிளி மைதானத்தில் காணப்பட்ட 400 ரசிகர்களும் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக ஸ்கொட்லாந்து ரசிகர்கள் 2600 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் ஆயிரக்கணக்கானவர்கள் லண்டன் சென்றுள்ளனர்.போட்டிக்கு முன்னதாக மத்திய லண்டனில் பெருமளவானவர்கள் காணப்பட்டனர்.

நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களில் மதுபானசாலைகளிற்கு சென்றவர்களும் உள்ளனர் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.