மாநில நெடுஞ்சாலை 30 (State highway 30) இல் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

ரோட்டோருவாவிற்கும் டோக்கோரோவாவிற்கும் இடையிலான எஸ்.எச் 30 மற்றும் விரினகி பள்ளத்தாக்கு வீதி சந்திக்கும் அருகே ஜூன் 21 திகதி அன்று இந்த விபத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் ஜூன் 25ஆம் திகதி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.