இந்தோனேஷியாவில் பட்டம் விடும்போது அதனுடன் சேர்ந்து பறந்த சிறுவன் 30 அடி உயரத்திலிருந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

லாம்பங் (Lampung ) என்ற இடத்தில் திருவிழாவை முன்னிட்டு சில சிறுவர்கள் இணைந்து பிரமாண்டமான பட்டம் தயாரித்திருந்தனர்.

 

அதனை காற்றில் விட முயற்சிக்கும் போது 12 சிறுவன் ஒருவர் பட்டத்தின் கயிற்றினை இறுகப் பிடித்திருந்ததால் திடீரென பட்டத்துடன் சேர்ந்து பறக்கத் தொடங்கினான்.

 

பின்னர் 30 அடி உயரம் வரை சென்ற அவர் அங்கிருந்து கீழே விழுந்தான். இந்தக் காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.