தெற்கு ஆக்லாந்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் கொலை குற்றம்சுமத்தப்பட்ட இரண்டு நபர்கள் அடுத்த ஆண்டு விசாரணைக்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 2021 இன் பிற்பகுதியில் 31 வயதான அலெக் மோலா எட்டாஹூவில் (Ōtāhuhu) கொல்லப்பட்ட பின்னர் கொலை விசாரணை தொடங்கப்பட்டது.

குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சோசயா வைடோஹி மற்றும் மெத்துசெலக் தலகாய் ஆகியோர் இன்று காலை ஆக்லாந்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்கள், அங்கு அவர்களது வழக்கறிஞர் எம்மா ப்ரயெஸ்ட் அவர்கள் குற்றவாளி அல்ல என வாதாடினார்.

இந்நிலையில் குற்றவாளிகளான இருவரும் காவலில் வைக்கப்பட்டதுடன் அவர்கள் 2022 செப்டம்பர்  இல் விசாரணைக்கு வருவார்கள் என நீதி மன்றம் உத்தரவிட்டது.