எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போதே அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கூட்டத்தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.