போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து வாடிகன் பத்திரிகை அலுவலகத்தின் தலைவர் மோட்டியோ புருனி வெளியிட்டுள்ள அறிக்கையில் “போப் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை ஈராக்கில் பயணம் மேற்கொள்கிறார். தலைநகர் பாக்தாத் ஆபிரகாம், எர்பில் ஆகிய நகரங்களுக்கு அவர் செல்கிறார். ஈராக் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் கத்தோலிக்க திருச்சபையின் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த பயணம் உலகின் தொற்று நோயியல் சூழலில் உலகுக்கான ‘சமாதான செய்தி’யாக அமையும்” என கூறினார்.