தேசிய கட்சி எம்.பி. சிமியோன் பிரவுனை கொலை செய்வதாக அச்சுறுத்திய நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சேஸ் ஜெய்டன் கிமுரா, வயது 25,குறித்த கொலை மிரட்டலை விடுத்திருந்த நிலையில் இன்று ஹட் பள்ளத்தாக்கு மாவட்ட நீதிமன்றத்தில் (Hutt Valley District Court) ஆஜரானார்.

சிமியோன் பிரவுன் பாக்குரங்காவின் (Pakuranga) பாராளுமன்ற உறுப்பினராகவும், பொலிஸ் மற்றும் திருத்தங்களுக்கான தேசிய செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.

மே மாதத்தில், கிமுரா ஒரு மொங்கல் மோப் உறுப்பினராக இருந்தார்.இந்நிலையில் சிமியோன் பிரவுனிற்கு கொலை மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிபதி ஆர்தர் டாம்ப்கின்ஸ் கிமுராவை காவலில் வைத்தார்.

அவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி ஹட் பள்ளத்தாக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.