ரிச்மண்டில் (Richmond) நடந்த கடுமையான தாக்குதல் குறித்து விசாரிக்கும் நெல்சன் போலீசார் பொதுமக்களிடமிருந்து தகவல்களை கோருகின்றனர்.

அதிகாலை 1 மணிக்கு முன்னதாக ரிச்மண்ட் மாலின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள சண்டியல் சதுக்கத்தில் (Sundial Square) இந்த தாக்குதல் நடந்தது.

குறித்த சம்பவத்தில் ஒரு நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதைக் கண்ட எவரும், அல்லது உதவக்கூடிய ஏதேனும் தகவல் இருந்தால், 105 என்ற இலக்கத்திற்கு அழைத்து, கோப்பு எண் 210613/2942 ஐ மேற்கோள் காட்டி பொலிஸைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாற்றாக, 0800 555 111 என்ற எண்ணில் க்ரைம்ஸ்டாப்பர்களுக்கு போன் செய்வதன் மூலம் தகவல்களை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.