பே ஆஃப் பிளெண்டி (Bay of Plenty),பெங்காரோவாவில் (Paengaroa) உள்ள கைதுனா நதியில் (Kaituna River ) படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 11.45 மணியளவில் இரண்டு நபர்களுடன் ஒரு சிறிய படகு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஃபோர்டு சாலை (Ford Road) அருகே ஆற்றின் வாயில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து கடலோர காவல்படை, ஆம்புலன்ஸ்,மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

ஒருவர் கரைக்கு கொண்டு வந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இரண்டாவது நபர் தண்ணீரிலிருந்து மீட்கப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் உயிரிழந்தார்.