க்ளூதா மாவட்டத்தில் (Clutha District) இரண்டு கார் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதுணன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் லாரன்ஸ்-வைட்டாஹுனா நெடுஞ்சாலையில் (Lawrence-Waitahuna Highway) இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மாநில நெடுஞ்சாலை 8 தடைசெய்யப்பட்டு (State Highway 8) பிளாய் சாலையில் (Bloy Road) போக்குவரத்து திருப்பிவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.