நாடு பூராவும் உள்ள 103 நதிகளை தூய்மையாக்கி பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையில் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 

சுரக்கிமு கங்கா அதாவது நதிகளைக் காப்போம் என்ற பிரதான திட்டத்தின் கீழ், இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

சுற்றாடல் தொடர்பான அமைச்சு மட்ட ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.