கேன்டர்பரி உயர் நாட்டில் (Canterbury high country) விண்ட்விஸ்டில் (Windwhistle) அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்..

விமானம் மாலை 3.05 மணியளவில் கோல்ஃப் மைதானத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது,அதில் நான்கு பேர் பயணித்த நிலையில் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர் மூலம் கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் நான்காவது நபர் மிதமான காயங்களுக்கு ஆளானதால், ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.