வெல்லம்பிட்டி சிவில் பாதுகாப்புப் படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டது.

கொவிட்- 19 தொற்று பாதிப்புற்றதாக ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு வெல்லம்பிட்டி சிவில் பாதுகாப்புப் படை(CDF) முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

முகாமின் சாரதி ஒருவர் மீரிகமவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக குறித்த முகாம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து முகாமிலுள்ள மொத்தம் 67 உறுப்பினர்களும் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.