தெற்கு ஆக்லாந்து புறநகர்ப் பகுதியான பாபகுராவில் ஒரு கார் முற்றத்தில் தீப்பிடித்து, அந்த பகுதி முழுவதும் கருப்பு புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.

தீ விபத்துக்கு எதிராக போராட நகரம் முழுவதிலும் இருந்து 19 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு மற்றும் அவசரநிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் அப்பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.